Unmai Sigaram News: நித்தி ஆயோக் கூட்டத்திற்குப் பின் பிரதமர் மோடியை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்!
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (11.6.2026) புதுதில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில், நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், தொழில் முதலீடுகள், இளைஞர் வேலைவாய்ப்புகள் மற்றும் மாநில முன்னேற்றப் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழ்நாட்டிற்கு புதிய மத்திய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் முதலமைச்சர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.