இடுகைகள்

டெல்லி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Unmai Sigaram News: நித்தி ஆயோக் கூட்டத்திற்குப் பின் பிரதமர் மோடியை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்!

படம்
  மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (11.6.2026) புதுதில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில், நித்தி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், தொழில் முதலீடுகள், இளைஞர் வேலைவாய்ப்புகள் மற்றும் மாநில முன்னேற்றப் பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழ்நாட்டிற்கு புதிய மத்திய திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாகவும் முதலமைச்சர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

Unmai Sigaram News:இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்துப் பேசினார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய்

படம்
  புதுதில்லியிலுள்ள இந்திய குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Unmai Sigaram News: மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவரை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்!

படம்
  மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களை, புதுதில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், தமிழ்நாட்டின் முன்னேற்ற முயற்சிகள் மற்றும் இளைஞர்களின் நலன் தொடர்பான பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழகத்தின் புதிய வளர்ச்சி பாதையை உருவாக்கும் நோக்கில் பல புதிய திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.