Unmai Sigaram News: பரமக்குடி சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு: மாணவர்களின் கோரிக்கையை ஏற்று போர்வெல் மற்றும் கட்டிடப் பணிகளைச் சரிசெய்ய சட்டமன்ற உறுப்பினர் கே.கே.கதிரவன் உத்தரவு!
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் திரு. கே.கே. கதிரவன், பி.ஏ., பி.எல்., எம்.எல்.ஏ அவர்கள், பரமக்குடி ஓட்டப்பாலம் அருகே உள்ள சமூக நீதி விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள், தண்ணீர் வசதி இல்லை என்றும், போர்வெல் பழுதடைந்துள்ளதாகவும் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர். மாணவர்களின் சிரமத்தை உடனடியாகக் கவனித்த திரு. கே.கே. கதிரவன் அவர்கள், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலரைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, பழுதடைந்த போர்வெல்லை உடனடியாகச் சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், விடுதிக் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதைக் கண்டறிந்த அவர், அதனைச் சீரமைப்பது குறித்தும், புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்குவது குறித்தும் மாவட்ட அதிகாரியிடம் விரிவாகக் கோரிக்கை வைத்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது, பரமக்குடி நகர மன்றத் தலைவர் திரு. சேது கருணாநிதி, பரமக்குடி கிழக்கு ஒன்றியச் செயலாளர் திரு. ஜெயக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.