Unmai Sigaram News: பெண்களின் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை': முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்!
பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' தொடங்கப்பட உள்ளது. இந்த அதிரடிப்படையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.
இந்தச் சிறப்பு அதிரடிப்படையின் முக்கிய செயல்பாடுகள்:
- பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் சுற்றுக்காவல் பணிகளை மேற்கொள்வது.
- பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல்.
- குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் எடுத்தல்.
- பொறுப்புடைய அனைவரையும் ஒருங்கிணைத்துப் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குதல்.
- காவல்துறையின் இருப்பை உறுதி செய்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துதல்.
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உகந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மக்கள் இயக்கமாகச் செயல்படுதல்.
இந்தத் தொடக்க விழா 09.06.2026 அன்று மாலை 5.00 மணிக்கு, சென்னை எழும்பூரில் உள்ள இராசரத்தினம் அரங்கத்தில் நடைபெறுகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக