Unmai Sigaram News: விருதுநகரில் அமைச்சர்கள் ஆய்வு: 180 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், சிறுபான்மையினருக்கான அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வக்ஃபு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு. ஏ.எம். ஷாஜஹான் அவர்கள் பங்கேற்று, துறை சார்ந்த செயல்பாடுகளை விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த நிகழ்வில் தகுதியுள்ள 180 பயனாளிகளுக்கு, மொத்தம் ரூ. 16.59 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக